புதன், 10 ஜூன், 2009

அத்தனை கஷ்டபட்டு வாழ்ந்து .....
கடைசியில் அந்தஒரு ரூபாய் கூட ...
சொந்தம் இல்லை உங்களுக்கு ....
அதற்க்கு நீங்களும் எங்களை- போல் \
வாழ்ந்து பாருங்களேன் கடைசியில் ...
சந்தோஷமாவது மிஞ்சும் ....
இதில் உங்களுக்கு ஆறு அறிவு .என்பதும் ...
எங்களுக்கு ஐந்து அறிவு -என்பதில் ...
என்ன சந்தோசம் உங்களுக்கு ...
நாங்கள் எப்படியோ வாழ்ந்து
தானாகவோ கொல்லபட்டோ சாகிறோம் ...
உங்களை போல் கச்டபடாமல் ....
நீங்களோ கஷ்டப்பட்டு வாழ்ந்து ...
தானாகவோ இல்லை யாராலையோ ....
கொல்லப்பட்டு சாகிறீர்கள் .....
உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே...
ஒரு வித்தியாசம் தான் ....
பேச முடியவில்லை என்பது ...

( கூடி வாழ்தல் கோடி நன்மை )
( இல்லாதவருக்கு குடுத்து வாழ்தல்
குலத்திற்கே நன்மை


கண்ணாடி வளையல்
கண்ணாடி வளையல்....
கை குலுங்கும் வளையல்...
காளையரின் மனதில் .....
கல் வீசும் வளையல்....
கண்ணிபெண்ணின் மனதில் ...
காதல் செய்யும் வளையல்.....
குட்டி பெண்ணின் கையில் ...
கும்மாளம் இடும் வளையல்..
கல்யாண பெண்ணிற்கு -மனம் ..
கலகலக்கும் வளையல் .....
சீமந்த பெண்ணிற்கோ....
வளைகாப்பு வளையல்.....

பெண்ணிற்கோ இத்தனை ..
இத்தனை சந்தோசம் தந்த .....
வளையல் -வேதனையும் தருகிறதே...
அவளை கைபிடித்த கணவன் ....
இறந்துவிட்டால் அவனோடு -அவள் ...
சந்தோசம் போய்விடுவது நிட்சயமே ...
அவனோடு அனுப்ப பூவை எஅடுது ...
பொட்டை அழிப்பது சம்பிரதாயம் ..
என்றாலும் -அவள் கை நிறைய ...
கண்ணாடி வளையலை போட்டு ....
கடைசியாக அழகு பார்த்து ...
அவள் -கை பிடித்து வளையலை..
கல்லால் உடைத்து நொறுக்கும் -போது ..
அவள் -மனம் எப்படி நொறுங்குகிறது ...--
யாருமே -இதை உணர மாட்டாரோ ....
பிறந்த முதல் அணிந்த வளையலை...
விதவை என்றதும் பிறிவது - முறையானாலும் ...
வளையல் போட்டு கல்லால் உடைப்பதை ..
தவிர்த்து -போடாமல் விடலாமே.....
அன் நிலையில் தான் வாழ்கையில் ...
அநுபவித்த எல்லா சந்தோசங்களையும்

நொறுங்கிபோனதை நினைத்து ...
அவள் மனம் கலங்கி துடிப்பதை ....
பார்தாலே பார்போர் மனம் ...
கதறி அழுகிறது கல கலப்பான ...
அவள் -சந்தோஷ சத்தம் .,,
அந்த நொறுங்கிய வளையலோடு ...
போய்விடுகிறது அவள் கணவனோடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக