செவ்வாய், 23 ஜூன், 2009

தேவனே தேவனே...
புத்தர் உலகத்தில் ...
ஏற்படுத்திய மார்க்கத்தை விட ..
கஜினி முகமது போல் ...
தினமும் படையடுத்தாய் ...
என்னை காண்பதற்கு நீ ....
என் -புன்னகையை பரிசளித்து ...
உன்னக்கொரு உலகத்தையே ....
பரிசாக கொடுதேன் ..
என் -நிணைவாக உன்னக்கு ...

உன் -மனதை கொத்தி கொத்தி ..
மனங்கொத்தி பறவையாய் மாறி ....
உன் -மனதை ஒட்டைஇட்டு .....
திடமான கூடு கட்டி ...
ஓட்டையை நிரப்பிட்டு ....
அந்த கூட்டினில் குடியும் ஏறினேன் ....
நீ -என்னை ஒதுக்காதபடி .....(விலக்காதபடி )

என் முகத்தில் ..
வந்து விழும் முடிகளை ...
ஒதுக்கி விடும் போதெல்லாம்
என் -உண்மை முகத்தை ...
ஆசையோடு பார்க்க -நீ ....
அருகில் வந்துவிடுவாயோ ....
என பயந்து தவிப்பேன் ....
ஆனால் -நீ தூரத்தில் ...
இருந்து என்னை ரசித்திடும் ....
அழகினை பார்த்து நான் ...
சிலையாய் நின்றிடுவேன் ....
மன அமைதியுடன் .....

நீ எப்போது என்னை ....
நேசிப்பதாக சொல்ல ஆரம்பித்தாயோ ...
அப்போதே நான் என்னைப்பற்றி .....
சிந்திக்க தொடங்கிவிட்டேன் ...
அதனால் என் நேசிப்பிடம் ....
என் காதலை சொல்லி .....
காதலிக்க தொடங்கி விட்டதை ....
உன்னிடம் சொல்ல .எனக

எனக்கு மனம் வரவில்லை இப்போத்ம் ...

மனிதர்களின் இருப்பிடத்தில் கூட ...
கடவுள் இருந்திடும் ...
ஆனால் -காதலி நீ ...
குடியிருக்கும் வீடான ....
என் -இதயத்தில் யாரையும் ...
குடி வைத்திட முடியாது என்பதனை ....
எப்போதும் உணர்த்துகிர்ராய் ...
என் இதய தேவதையே.....

காதல்தான் நீ செய்யும் தவம் ....
உன் -கடும் தவத்தை கலைத்து ...
என்ன வரம் வேண்டுமென்று ...
உன்னை படைத்திட்ட ....
பிரம்மனே உன்னிடம் வேண்டினும் ...
உன் -காதல் தவத்தினும் ...
சிறந்தது வேரிலை என்று ...
அடுத்த பிறப்பிலும் காதலனாகவே...
பிறந்திட வேண்டுமென நீ ....
தவம் கேட்டிடுவாய் என் ...
பொருட்டு நீ செய்த தவத்தின் ...
பலனை இப்போதே நீ ...அடைத்திட ..
நானே வந்திட்டேன் இப்போதே...
உன்னிடம் உன்னிடம் ...

ஒரே ஓரு முறை என்றாலும் ....
என் நிழல் உன் மீது ...
பட்ட போதுதானே ....
நீ ஓளி ஊட்டப்பட்டு ...
இப்படியெல்லாம் நிலைமாறி ....
கஜினியாய் ,கூடாய் சிலையாய் ..
ரிசியாய் பித்தனாய் கவிஞனானாய் ....
என் அன்பே அன்பே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக